தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது


தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2023 7:17 PM GMT (Updated: 20 Jun 2023 6:55 AM GMT)

நெல்லை அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள அனைத்தலையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 41). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் மகாராஜனை, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேலைக்கு அழைத்து சென்றதால் வேலைக்கான பணத்தை கேட்டுள்ளார்.

அதற்கு ஆத்திரம் அடைந்த ராஜேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் இசக்கிமுத்து (21), ஜெரின் ஆகியோர் சேர்ந்து அவதூறாக பேசி கையால் மகாராஜனை தாக்கி உள்ளனர். இதுகுறித்து மகாராஜன் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் சுதன் வழக்குப்பதிவு செய்து இசக்கி முத்துவை நேற்று கைது செய்தார். மற்றவர்களை தேடி வருகிறார்.


Next Story