பெண்கள் விடுதியில் திருடிய வாலிபர் கைது

பெண்கள் விடுதியில் திருடிய வாலிபர் கைது
கணபதி
கோவை டாடாபாத் பகுதியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கி இருப்பவர் கீர்த்தி மீனா(வயது 28). இவரது அறையில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.500 ஆகியவை காணாமல் போனது. மேலும் மற்றொரு பெண்ணின் அறையில் இருந்த செல்போனும் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து அவர்கள் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வால்பாறையை சேர்ந்த கார்த்திக்(19) என்பவர் விடுதிக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





