மொபட் திருடிய வாலிபர் கைது

வடபொன்பரப்பியில் மொபட் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு
வடபொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் சதாம்உசேன்(வயது 35). இவர் சம்பவத்தன்று இரவு தனக்கு சொந்தமான மொபட்டை அவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. இதுகுறித்து சதாம் உசேன் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மொபட்டை திருடிச்சென்ற திருப்பூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜ்கமல்(34) என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த மொபட்டையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





