இருசக்கர வாகனங்கள் திருடிய வாலிபர் கைது


இருசக்கர வாகனங்கள் திருடிய வாலிபர் கைது
x

இருசக்கர வாகனங்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

மணப்பாறை:

இருசக்கர வாகனங்கள் திருட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் பல்வேறு இடங்களில் ஒரே வகையை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போயின. இதையடுத்து போலீசார் நடத்திய திடீர் வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த நபரை நிறுத்தி, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ேபாலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், கரூர் மாவட்டம், பாலவிடுதி அருகே உள்ள குரும்பப்பட்டியைச் சேர்ந்த ஜெயபால்(வயது 29) என்பது தெரியவந்தது.

கைது

மேலும் அவர் மணப்பாறை பகுதியில் பல்வேறு இடங்களில் ஒரு மாதிரியான 20 மோட்டார் சைக்கிள்களை மட்டும் குறி வைத்து திருடியது தெரியவந்தது. இது வழக்குப்பதிவு செய்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலான போலீசார், அவரை கைது செய்து, ேமாட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story