குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த காளி என்பவருடைய மகன் பேச்சித்துரை என்ற துரை (வயது 24). இவர் நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து பேச்சிதுரையை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று பேச்சிதுரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story