போக்சோவில் வாலிபர் கைது

வருசநாடு அருகே போக்சோவில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 27). இவருக்கு 11-ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவியிடம் பேசி பழகியதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநாத் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கடமலைக்குண்டு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





