போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:46 PM GMT)

சேர்ந்தமரம் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள கே.வி.ராமசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வில்சன்குமார் (வயது 21). இவர் 11-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். இந்த நிலையில் அவர் அந்த மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி 2 முறை கர்ப்பம் ஆனதாகவும், அவரது பெற்றோருக்கு தெரியாமல் கர்ப்பத்தை அழித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் போலீசார் ேபாக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, வில்சன்குமாரை கைது செய்தனர்.


Next Story