போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சேர்ந்தமரம் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள கே.வி.ராமசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வில்சன்குமார் (வயது 21). இவர் 11-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். இந்த நிலையில் அவர் அந்த மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி 2 முறை கர்ப்பம் ஆனதாகவும், அவரது பெற்றோருக்கு தெரியாமல் கர்ப்பத்தை அழித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் போலீசார் ேபாக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, வில்சன்குமாரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





