வேலூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


வேலூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

வேலூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

வேலூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வேலூரை அடுத்த செதுவாலை கிராமத்தை சேர்ந்த சேக்பயாஸ் மகன் சுபான் (வயது 19). இவர் வேலூர் பைபாஸ் சாலையில் பழைய லாரியை உடைக்கும் வேலை செய்து வந்தார். சேக் பயாஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், அதனால் தாயார் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றதாகவும், சுபான் தற்போது தாத்தாவுடன் வசித்து வந்தாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சுபான் மனஅழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story