மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது


மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
x

ஆம்பூர் அருகே மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை குற்ற பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததார்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வாணியம்பாடி டவுன் வி.எஸ்.கே. நகர் பகுதியை சேர்ந்த மாதவன் (வயது 20) என்பதும், ஆம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story