மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
காரைக்குடி
காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜேசு. இவர் அம்மன் சன்னதி பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டருகே 3 ஏக்கர் இடத்தில் தோட்டம் வைத்துள்ளார். சம்பவத்தன்று ஜேசுவின் மகன் அகிலன் (வயது 34) தோட்டத்தில் உள்ள மோட்டார் பம்பை இயக்குவதற்கு பிளக்கை மாட்டும்போது எதிர்பாராதமாக மின்சாரம் தாக்கி மயங்கினார். உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அகிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





