மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 28 April 2023 6:45 PM GMT (Updated: 28 April 2023 6:45 PM GMT)

உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.

தேனி

உத்தமபாளையம் அருேக உள்ள கரியணம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 21). கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர், அதே பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது தொட்டியில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. இதனால் மின்மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை போட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக ராஜேஷ் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story