சென்னை, ராணி மேரி கல்லூரியில் இன்று இளைஞர் திறன் திருவிழா - முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்


சென்னை, ராணி மேரி கல்லூரியில் இன்று இளைஞர் திறன் திருவிழா - முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
x

சென்னை, ராணி மேரி கல்லூரியில் இன்று இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது.

சென்னை,

இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயிற்சியளிக்கும் அரசுத் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவித்தார்.

இதன்படி சென்னை, ராணி மேரி கல்லூரியில் இன்று இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் திறன் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி சேர்க்கைச் சான்றிதழ்களையும், பணி நியமன ஆணைகளையும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளையும் முதல்-அமைச்சர் வழங்க உள்ளார்.

இந்த இளைஞர் திறன் திருவிழாவில் இளைஞர்களுக்கு திறன் குறித்த ஆலோசனைகளை வழங்க கலந்தாய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் துறைகளில் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், பயிற்சி பிரிவுகள், வேலை வாய்ப்புகள் போன்ற தகவல்களை தொழில் துறை வல்லுநர்கள் விரிவாக விளக்கமளிக்க உள்ளனர்.


Next Story