ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

பாவூர்சத்திரம் அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
பாவூர்சத்திரம் அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலா, சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த காரை மடக்கி அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தியதாக செங்கோட்டை அருகே உள்ள வடகரையை சேர்ந்த வெள்ளையப்பன் (வயது 27) என்பவரையும் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





