திமுக - கொ.ம.தே.க. இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை பேச்சுவார்த்தை


திமுக - கொ.ம.தே.க. இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 8 March 2021 7:11 AM GMT (Updated: 8 March 2021 7:11 AM GMT)

திமுக - கொங்கு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 5 பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, விடுதலை சிறுத்தைகள் - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6, மதிமுக - 6, காங்கிரஸ் - 25 ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாரமாக இழுபறியில் இருந்துவந்த திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான தொகுதி பங்கீட்டில் இன்று காலை உடன்பாடு எட்டப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதற்கிடையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு இன்னும் தொகுதி ஒதுக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - கொங்கு மக்கள் தேசிய கட்சி இடையே இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கொ.ம.தே.க. தலைவர்
ஈஸ்வரன் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை திமுக - தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளார்.

Next Story