அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி அழைப்பு


அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி அழைப்பு
x
தினத்தந்தி 9 March 2021 9:38 AM GMT (Updated: 9 March 2021 9:45 AM GMT)

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை,

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளர்களிடம் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார். 

இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில்,

நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள தேமுதிக-வுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் பொன்ராஜ் கூறுகையில், ’சுதீஷ், பிரேமலதாவை சந்தித்து அழைப்பு விடுப்பேன்’ என்றார்.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட நிலையில் தேமுதிக-வை கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story