திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு


திமுக கூட்டணியில் உள்ள  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 March 2021 8:50 AM GMT (Updated: 11 March 2021 8:50 AM GMT)

திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் 3 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. 

தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 3 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் 3 தொகுதிகள் விவரம் வருமாறு:-

1திருச்செங்கோடு.

2. சூலூர்.

3.பெருந்துறை.

மூன்று தொகுதிகளிலும் அதிமுகவை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நேரடியாக எதிர்கொள்கிறது.

Next Story