திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி


திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி
x
தினத்தந்தி 11 March 2021 10:19 AM GMT (Updated: 11 March 2021 10:19 AM GMT)

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டு உள்ளது.

சென்னை

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதிகள் உடன்பாடு நிறைவுபெற்றது.  இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. 

இந்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்  போட்டியிடும் 6 தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

1.பவானிசாகர் (தனி).

2.திருப்பூர் வடக்கு.

3.சிவகங்கை.

4.திருத்துறைப்பூண்டி.

5.வால்பாறை (தனி).

6.தளி.

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

மதுரவாயல், கோவில்பட்டி, திண்டுக்கல், கோவை வடக்கு, திருப்பூர் தெற்கு, பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விருப்பத் தொகுதிகளாக பட்டியலிட்டுள்ளது.

மதுரவாயல் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், மார்க்சிஸ்டுக்கு ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும், பத்மநாபபுரம் தொகுதியில் தற்போதையை எம்.எல்.ஏ.வாக திமுகவைச் சேர்ந்தவர் இருப்பதால், அந்த தொகுதியை ஒதுக்குவதிலும் திமுக தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

3 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story