தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் - திமுக தேர்தல் அறிக்கை
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டுவரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 500 திட்டங்களை கொண்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் சிலவற்றை காண்போம்.
திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்,
* திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
* அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்
* முதலமைச்சருடைய நேரடி கட்டுப்பாட்டில் தனி தொகுதி உருவாக்கப்பட்டு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்டிருக்கக்கூடிய மனுக்களுக்கு 100 நாட்களுக்குள்
தீர்வு
* அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும்
* சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்
* பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத்திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்
* சென்னையில் திராவிட இயக்க திடல் கோட்டம் அமைக்கப்படும்
* கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டுவரும் வரையில் சொத்துவரி அதிகரிக்கப்படாது
* கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அரிசி அட்டை தாரர்களுக்கு ரூ.4,000 நிவாரணம் வழங்கப்படும்
* ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்
* பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்
* சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்
* பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்
* மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்
* நியாயவிலை கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்
* உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்
* அனைத்து அரசு வேலைவாய்ப்புகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்படும்
* சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும்
* பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை கலைய சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்
*குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டுவரப்படும்
* நகர்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிறுப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்
* கிராமநத்தத்தில் உள்ள வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கப்படும்
* சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்
* அனைத்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்
* கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
* முக்கியமான மலைக்கோவில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி செய்யப்படும்
* கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும் ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும்
* இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
* மசூதி, தேவாலங்கயங்களை புனரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
* அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் கீழ் முறையான பயிற்சிபெற்று 14 ஆண்டுகளாக வேலையில்லாமல் காத்திருக்கும் 205 அட்சகர்களுக்கும்
உடனடி பணி நியமணம் செய்யப்படும்
* 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்
* ஏழைமக்கள் பசிதீர முதல்கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்
* நடைபாதைவாசிகள் தங்க இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்படும்
* தமிழக ஆறுகள் மாசடையாமல் காக்க தமிழக ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்
* இயற்கை எரிவாயுவில் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்படும்
* கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்
* ஊட்டச்சத்து குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு உணவுக்கூடை திட்டம் செயல்படுத்தப்படும்
* பத்திரிக்கையாளர், ஊடகத்துறையினர் நலன்காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்
* சிறு,குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும்
* ஆட்டோ ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்
* மகளிருக்கு பேறுகால உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்
* நீட் தேர்வை ரத்து செய்ய திமுக ஆட்சி அமைந்ததும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்
* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும்
* புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
* தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டுவரப்படும்
* வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்
* அரசு பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்
* புதிய தனி கனிமவள அமைச்சகம் உருவாக்கப்படும்
* கனிமங்கள், தாதுமணல், மணல் ஆகிய தொழில்கள் அனைத்து டாமி நிறுவனத்தின் கீழ் அரசே நடத்தும்
* அரசு பள்ளி, கல்லூர் மாணவர்களுக்கு இலவச டேட்டாவுடன் கைகணிணி (டப்ளட்) வழங்கப்படும்
* கல்வி நிறுவனங்களில் ’வைபை’ வசதி செய்து தரப்படும்
* அரத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியில் உள்ள அனைத்து ஊழியர்களும் பணி நிரந்தம் செய்யப்படுவார்கள்
* போக்குவரத்து துறையினருக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்
* நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்
* கரும்பு டன் ஒன்றுக்கு ஆதாரவிலையாக ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்படும்
* உழவர் சந்தை அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்
* நீர்பாசனத்துறைக்கு மாற்றாக புதிய நீர்வள ஆதாரங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும்
* நீர்மேலாண்மை ஆணையம் அமைந்திட சட்டம் கொண்டுவரப்படும்
* முதலமைச்சரின் நேரடி பார்வையில் ரூ.10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி,குளங்கள் பாதுகாப்பு சிறப்புத்திட்டம் அமல்படுத்தப்படும்
* ரூ,2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்
* ஏழை,எளிய சிறுவணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்
* அதிமுக அரசால் ஏற்படுள்ள கடன்சுமையை சீர்செய்ய பொருளாதார உயர்மட்டக்குழு அமைக்கப்படும்
* மீனவசமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்
* ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்
* அரசியலமைப்பு சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
* மத்திய அரசு பள்ளிகள் உள்பட தமிழக பள்ளிகள் அனைத்திலும் 8-ம் வகுப்பு வரை தமிழ்கட்டாயப்பாடம் ஆக்கிட சட்டம் கொண்டுவரப்படும்
* சென்னை நகரை வெள்ளப்பெருக்கில் இருந்து பாதுகாத்திட சென்னை பெருநகர வெள்ளத்தடுப்பு மேலாண்மைக்குழு அமைக்கப்படும்
* வேளாண்மைத்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்
* இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும்
* தமிழ் எழுத்து வரி வடிவம் சிதைக்கப்படுவதை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்
* இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
* வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனை பேணுவதற்கு வேளிநாடுவாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்
* மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்
* அரசுப்பள்ளி,கல்லூரி மாணவியருக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்
* பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
* மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்
* மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சலுகை வழங்கப்படும்
* மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மூன்றுசக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும்
* புகழ்பெற்ற இந்துகோவில்களுக்கு ஆண்மீக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்
* பக்கீங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்
* சென்னை சிறுசேரியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்
* திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கோவையில் மேட்ரோ ரெயில் திட்டம் கொண்டுவரப்படும்
* பள்ளி மாணவர்களுக்கு காலை ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்
* கூட்டுறவு வங்கியில் 5 சவரன் உள்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
* 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
* 30 வயதிற்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
* மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவுவங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
* அரசு உள்ளூர் பேருந்துகளில் (டவுண் பஸ்) பெண்களுக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்
* இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும்
* இந்த அமைச்சகத்திற்கு ‘திட்டங்கள் செயலாக்க அமைச்சகம்” என பெயரிடப்படும்
Related Tags :
Next Story