சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்!


சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்!
x
தினத்தந்தி 23 March 2021 1:44 PM IST (Updated: 23 March 2021 1:44 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி திமுக வேட்பாளர் செங்குட்டுவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி திமுக வேட்பாளர் செங்குட்டுவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது சாலையில் நடந்து சென்று திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். சாலையில் நடந்து செல்லும் போது ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
1 More update

Next Story