இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் உத்தரபிரதேசம் தான் - யோகி ஆதித்யநாத்திற்கு முக ஸ்டாலின் பதிலடி

இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டும் மாநிலம் உத்தரபிரதேசம் தான் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று கோவையில் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய உ.பி. முதல்மந்திரி யோகி, தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அவர்கள் பெண்களுக்கு எதிராக நபர்கள்’ என்று கடுமையான விமர்சனங்களை திமுக மீது முன்வைத்தார்.
இந்நிலையில், உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பதிலடி கொடுத்துள்ளார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் பேசியதாவது, பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பின் நிலை நாடே அறியும். அங்கிருந்துவந்த யோகி ஆதித்யநாத், திமுக பற்றியும் தமிழ்நாடு பற்றியும் பேச என்ன தகுதி இருக்கிறது? தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உ.பி. முதல்மந்திரி சொல்கிறார்.
இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக உத்தரபிரதேசம் தான். தமிழகத்தையும், திமுகவையும் பற்றி பேச பிரதமர் மோடிக்கும், உ.பி. முதல்வருக்கு எந்தவித தகுதியும் இல்லை. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியது ஓபிஎஸ் தான்’ என்றார்.
Related Tags :
Next Story