அண்ணா நகரில் உள்ள திமுக எம்.எல்.ஏ மோகன் மகன் கார்த்தி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை


அண்ணா நகரில் உள்ள திமுக எம்.எல்.ஏ மோகன் மகன் கார்த்தி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 2 April 2021 5:32 AM GMT (Updated: 2 April 2021 5:32 AM GMT)

அண்ணா நகரில் உள்ள திமுக எம்.எல்.ஏ மோகன் மகன் கார்த்தி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மோகன் மகன் கார்த்தி வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசனும் வசித்து வரும் சென்னை நீலாங்கரையில் உள்ள வீடு மற்றும் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் திமுக கட்சிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருமானவரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story