பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு தளபதி சுட்டு கொலை


பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு தளபதி சுட்டு கொலை
x

பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு தளபதி பைசல் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்பட பல பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இவர்கள் பொதுமக்கள் மீது அவ்வப்போது தாக்குதலை நடத்தி அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த ராணுவம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துங்க்வா அருகே பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவத்தினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்லாங் என்ற இடத்தில் முகாமிட்டு இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பயங்கரவாத அமைப்பின் தளபதியான பைசல் சுட்டு கொல்லப்பட்டார். அதேபோல் பராச்சினார் பகுதி அருகே நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.


Next Story