பெரு நாட்டில் பஸ் மீது லாரி மோதி 2 பேர் பலி: 20 பேர் படுகாயம்


பெரு நாட்டில் பஸ் மீது லாரி மோதி 2 பேர் பலி: 20 பேர் படுகாயம்
x

கோப்புப்படம்

பெரு நாட்டில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

லிமா,

தென் அமெரிக்க நாடான பெருவின் வடக்கு பான்-அமெரிக்க நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அன்காஷ் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் நிலைதடுமாறி எதிரே வந்த பஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பஸ்சில் இருந்த 20 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


Next Story