ரஷ்யா-உக்ரைன் போரில் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - அமெரிக்கா தகவல்


ரஷ்யா-உக்ரைன் போரில் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - அமெரிக்கா தகவல்
x

ரஷ்யா-உக்ரைன் போரில் இரு நாட்டு தரப்பில் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன.

இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரில் இரு நாட்டு தரப்பில் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரி ஜென் மார்க் கூறியதாவது:-

ரஷ்யா-உக்ரைன் போரில் 40,000 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இரு நாட்டு தரப்பிலும் 2 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளன. பரஸ்பர அமைதி வெறும் ராணுவ நடவடிக்கைகளால் மட்டுமே முடியாது. அதற்கு நீங்கள் வேறு வழிகளில் திரும்ப வேண்டும் என்று கூறினார்.

ரஷ்ய அதிபர் விளாத்திமிர் புதினின் போர் நடவடிக்கையால் உக்ரேனில் கடந்த ஆறு மாதங்களில் 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story