5 முதல்11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட சுவிட்சர்லாந்து ஒப்புதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Dec 2021 4:55 AM GMT (Updated: 11 Dec 2021 4:55 AM GMT)

5 முதல்11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட சுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது.

ஜெனிவா, 

ஸ்விட்சர்லாந்தில் 5 முதல்11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர்-பயோன்டெக்கின் காமிர்னடி தடுப்பூசி போட சுவிஸ் மருந்து நிறுவனமான ஸ்விஸ்மெடிக் ஒப்புதல் அளித்துள்ளது. 5-11 வயது உடையவர்களுக்கு இந்த  தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை மருத்துவ பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இளம் பருவத்தினருக்கு தடுப்பூசியின் பக்க விளைவுகள் பெரியவர்களைக் காட்டிலும் குறைவாகவே நிகழ்கின்றன.  தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், செலுத்தப்பட்ட இடத்தில் வலி, சோர்வு, குறைவாக அடிக்கடி தலைவலி, மற்றும் மூட்டு வலி, போன்ற சாதாரண பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்று அந்த நிறுவனம் கூறியது.

தற்போது வரை ஸ்விட்சர்லாந்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு காமிர்னடி மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

ஐரோப்பாவில் போர்ச்சுகல், இத்தாலி, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் தற்போது ஸ்விட்சர்லாந்தும் 5 முதல்11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதித்துள்ளது.


Next Story