ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேருக்கு பிப்ரவரி 22 வரை நீதிமன்ற காவல்...!


ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேருக்கு பிப்ரவரி 22 வரை நீதிமன்ற காவல்...!
x
தினத்தந்தி 8 Feb 2022 12:54 PM GMT (Updated: 8 Feb 2022 12:54 PM GMT)

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேருக்கு பிப். 22 வரை நீதிமன்ற காவலில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு,

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று நேற்றைய தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கே இலங்கை கடற்படையினர் ரோந்து பணிக்காக வந்துள்ளனர்.

அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாகவும், அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். 

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 11 பேருக்கு வரும் 22ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க  ஊர்க்காவல்துறை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Next Story