அமெரிக்காவில் ஒரேநாளில் புதிதாக 1,52,482 பேருக்கு கொரோனா பாதிப்பு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Feb 2022 12:25 AM GMT (Updated: 11 Feb 2022 12:32 AM GMT)

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,137 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 40.60 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 58.07 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7.89 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 7,89,71,166 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 2,137 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 9 லட்சத்து 39 ஆயிரத்து 095 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 4,93,58,442 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,86,73,629 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story