உக்ரைன் போரில் 10 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலி


Image Courtesy: dailymail.co.uk
x
Image Courtesy: dailymail.co.uk
தினத்தந்தி 22 March 2022 10:55 AM IST (Updated: 22 March 2022 10:55 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் போரில் 1ஒ ஆயிரம் ரஷிய வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

கீவ்

உக்ரைன் மீதான ரஷிய படைகளின் போா் இன்று  27-வது நாளை எட்டி உள்ளது . தலைநகா் கீவில் ஒரு வணிக வளாகம் மீது ரஷிய படைகள் குண்டுவீசி தாக்கியதில் பொதுமக்கள் 8 போ் கொல்லப்பட்டனா்.

அஸோவ் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மரியுபோல் நகா்தான் ரஷியாவின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. மூன்று வாரங்களுக்கு மேலாக முற்றுகையிட்டுள்ள ரஷிய படைகள், அந்த நகரைக் கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த நகரிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டபோதும் ரஷியாவின் தாக்குதலால் அது வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், மரியுபோல் நகரிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டுமானால், உக்ரைன் படையினா் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வேண்டும் என ரஷியா ஒரு நிபந்தனையை விதித்தது. ஆனால், இதை உக்ரைன் ஏற்க மறுத்து விட்டது.

நேற்றிரவு புள்ளிவிவரங்கள் படி  உக்ரைனில் 9,861  ரஷிய வீரர்கள் இறந்ததாகவும், 16,153 பேர் காயமடைந்ததாகவும் கூறுகின்றன. 1979 படையெடுப்பிற்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் சுமார் 15,000 ரஷிய வீரரக்ள் இறந்தனர் - ஆனால் அது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போர்.

உக்ரைன் போரில் பலியான  ரஷியர்களின் எண்ணிக்கை 15,000 ஆக உள்ளது - ஆனால் சமீபத்திய புள்ளிவிவரங்கள் அமெரிக்க மதிப்பீட்டின் 7,000 ஐ விட அதிகமாக உள்ளது.

இறப்பு எண்ணிக்கை ரஷிய  பாதுகாப்பு அமைச்சகத்தின் புதுப்பிப்பின் ஒரு பகுதியாகும் - மேலும், அரசாங்க சார்பு டேப்லாய்டான கொம்சோமோல்ஸ்கயா பிராவ்தாவின் இணையதளத்தில்  பதிவேற்றப்பட்டு பின்னர் அது விரைவாக அகற்றப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் ரஷியப் படைகள் வடகிழக்கு உக்ரேனிய நகரங்களான செர்னிஹிவ், சுமி அல்லது கார்கிவ் மீது எந்த தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
1 More update

Next Story