தென்கொரியாவில் சோகம் ஆஸ்பத்திரியில் தீப்பிடித்து 5 பேர் பலி


தென்கொரியாவில் சோகம் ஆஸ்பத்திரியில் தீப்பிடித்து 5 பேர் பலி
x

தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 நோயாளிகள் மற்றும் ஒரு நர்சு என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சியோல்,

தென்கொரியா தலைநகர் சியோலில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள இச்சியோன் நகரில் 4 மாடிகளை கொண்ட கட்டிடம் உள்ளது. கட்டிடத்தின் 4-வது தளத்தில் டயாலிசிஸ் நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. 2-வது, 3-வது தளங்களில் அலுவலகங்களும், முதல் தளத்தில் ஓட்டல்களும் உள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை 4-வது தளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் திடீரென தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் தீ ஆஸ்பத்திரி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்த மருத்துவ ஊழியர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்ற தொடங்கினர். இருப்பினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 நோயாளிகள் மற்றும் ஒரு நர்சு என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 37 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளும், நர்சும் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story