விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் ஆஸ்திரேலியா: காரணம் என்ன?


விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் ஆஸ்திரேலியா: காரணம் என்ன?
x

சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 6 லட்சத்திற்கும் மேல் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்று வருகிறார்கள்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலவும், அங்கேயே தங்கி பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றவும் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் அந்நாட்டிற்கு சென்று வருகின்றனர்.

குறிப்பாக சமீப காலங்களில் அங்கு செல்ல விரும்பி விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நாட்டில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிதாகி வருகிறது. மேலும் இதனால் பல உள்கட்டமைப்பு சிக்கல்களும் எழுந்தன. இது அந்நாட்டு குடிமக்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டு ஊடகங்களில் கருத்துகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய உள்துறை மந்திரி க்ளேர் ஓ நெய்ல் புதிய குடியேற்ற சட்டதிட்டங்கள் குறித்து அறிவித்தார். அவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவிற்குள் குடியேறுவோர் எண்ணிக்கை இனி படிப்படியாக குறைக்கப்பட்டு 2025 ஜூன் மாதத்திலிருந்து தற்போது உள்ள அனுமதி 50 சதவீதத்திற்கும் கீழ் குறைக்கப்படும்.

சர்வதேச மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவிற்குள் கல்வி பயில்வதற்காக நடத்தப்படும் பிடிஈ தேர்வில் ஆங்கில புலமைக்கான தேர்வு இன்னும் கடினமாக்கப்படும். ஒரு முறை அங்கு கல்வி பயின்றவர்கள் இரண்டாம் முறை கல்விக்காக அனுமதி கோரும்போது பரிசீலனைகள் கடுமையாக்கப்படும்" என கூறினார். தற்போதைய தரவுகளின்படி சர்வதேச மாணவர்கள் சுமார் 6 லட்சத்திற்கும் மேல் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story