ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்து - 3 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்து - 3 பேர் பலி
x

கோப்புப்படம்

காபூலில் தலீபான்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலீபான்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய அமெரிக்க படைகள் பழுதடைந்த தங்களுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே விட்டுச் சென்றன. அவற்றை கைப்பற்றிய தலீபான் படையினர் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று தலைநகர் காபூலில் தலீபான்கள் அமெரிக்க பிளாக் ஹாக் (Black Hawk) ரக ஹெலிகாப்டரை பயிற்சிக்காக பறக்கவிட்டனர். அப்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகவும், மேலும் அதில் இருந்த 5 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.


Next Story