கனடா: பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை சுட்டுக்கொன்ற போலீசார்


கனடா: பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை சுட்டுக்கொன்ற போலீசார்
x

ஒட்டாவா,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் 18 வயது இளைஞர் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தி 19 சிறுவர்கள் உள்பட 21 பேரை கொன்று குவித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் அண்டை நாடான கடனாவில் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடமாடி கொண்டிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 3 தொடக்கப்பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன.

அதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து துப்பாக்கியுடன் நடமாடிய நபரை சுற்றிவளைத்தனர். பின்னர் போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.


Next Story