தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக இலங்கை...! பாகிஸ்தான் தைமூர் போர்க்கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதி


தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக இலங்கை...! பாகிஸ்தான் தைமூர் போர்க்கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த  அனுமதி
x
தினத்தந்தி 11 Aug 2022 5:27 AM GMT (Updated: 11 Aug 2022 5:56 AM GMT)

தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக இலங்கை சீனா தயாரித்த பாகிஸ்தான் தைமூர் போர்க்கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதி அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பு

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன ராணுவத்தின் உளவு கப்பலான யுவான் வாங்-5 ஹம்பந் தோட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது. இதையடுத்து அந்த கப்பல் இன்று இலஙகை வருகிறது. 17-ந்தேதி வரை இலங்கை துறைமுகத்தில் அது நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, பாகிஸ்தானுக்காக சீனா, பி.என்.எஸ் தைமூர் என்ற போர் கப்பலை தயாரித்துள்ளது. ஷாங்காயில் உள்ள டோங் துறைமுகத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்டதாகும்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி கராச்சிக்கு இதை கொண்டு செல்ல சீனா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த கப்பலை வங்காள தாச கடல் பகுதி வழியே பாகிஸ்தானுக்குள் கொண்டு செல்ல அந்நாட்டு அரசிடம் சீனா அனுமதி கோரியிருந்தது.

ஆனால் சட்டோகிராம் துறைமுகத்தில் அந்த கப்பலை நிறுத்த வங்காளதேச அரசு அனுமதி மறுத்து விட்டது.ஷங்காயிலிருந்து கராச்சி செல்லும் வழியில் ஆகஸ்ட் 7 முதல் 10ந்தேதி வரை சட்டோகிராம் துறைமுகத்திற்கு வெளியே போர்க்கப்பல் நிறுத்திவைக்க அனுமதி கோரியது ஆனால் ஷேக் ஹசீனா அரசு தைமூருக்கு அனுமதி மறுத்தது.

இதையடுத்து பாகிஸ்தான் போர் கப்பலான தைமூரை கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படையில் இணைப்பதற்காக செல்லும் வழியில், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தைமூர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொழும்பு துறைமுகத்திலிருந்து கராச்சிக்கு புறப்படும். தைமூர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கராச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.போர்க்கப்பல் கராச்சி செல்லும் பயணத்தில் மலேசியா மற்றும் கம்போடியாவில் எந்த பயிற்சிகளிலும் பங்கேற்றது.


Next Story