முஸ்லிம் கணவரால் மகள் விற்பனை என அச்சம்: பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டை நாடிய கிறிஸ்தவ குடும்பம்


முஸ்லிம் கணவரால் மகள் விற்பனை என அச்சம்:  பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டை நாடிய கிறிஸ்தவ குடும்பம்
x

பாகிஸ்தானில் முஸ்லிம் கணவரால் விற்கப்பட்டு இருக்க கூடும் என அச்சப்படும் கிறிஸ்தவ குடும்பத்தினரின் மகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.



லாகூர்,



பாகிஸ்தானில் வசித்து வரும் கிறிஸ்தவரான கில், டெய்லர் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் நயப் கில். இவரை சதாம் ஹயத் என்ற முஸ்லிம் வாலிபர் மதம் மாற்றி, திருமணம் செய்து கொண்டுள்ளார்.

எனினும், தற்போது ஹயத்துடன் ஒன்றாக நயப் வசிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த நயப்பின் தந்தை கில் அச்சமடைந்து உள்ளார். தங்களது மகளின் பாதுகாப்பு பற்றி கில்லும், அவரது மனைவியும் முன்பிருந்தே வேதனைப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நயப் தன்னுடன் இல்லை என கணவர் கூறியது கேட்டு கில்லின் அச்சம் அதிகரித்து உள்ளது.

இதுபற்றி கில் கூறும்போது, தனது மகளை ஹசன் விற்றிருக்க கூடும் அல்லது கொன்றிருக்க கூடும். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து, எங்களது மகள் பாதுகாப்புடன் இருக்கிறாரா? அல்லது இல்லையா? என்பது பற்றி எங்களுக்கு தெரிய செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டை அவர் நாடியுள்ளார்.

ஓராண்டாக அவரது வழக்கை கோர்ட்டு எடுக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில், கில்லின் வழக்கறிஞர் மலூக் கூறும்போது, எங்களது 14 வயது மகள் நயப்பின் மீட்புக்கான எங்களுடைய மனுவை நீதிபதி முகமது அம்ஜத் ரபீக் ஏற்று கொண்டுள்ளார். சிறுமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி குஜ்ரன்வாலா காவல் தலைவருக்கு உத்தரவிட்டு உள்ளார் என கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் 1,000 சிறுமிகள் கடத்தப்படுகின்றனர். அவர்களில் 70 சதவீதம் பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்களுடைய மத அடையாளத்தில் இருந்து கட்டாயத்தின்பேரில் மாற்றப்பட்டு, பின்னர் திருமணம் செய்யப்படுகின்றனர். சில சமயங்களில் விற்கவும் செய்யப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கின்றன.


Next Story