ஈரான் சிறையில் இருந்து அமெரிக்கர்கள் விடுதலை


ஈரான் சிறையில் இருந்து அமெரிக்கர்கள் விடுதலை
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 19 Sep 2023 8:22 PM GMT (Updated: 19 Sep 2023 8:26 PM GMT)

ஈரான் சிறையில் இருந்து 5 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

டோகா,

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதால் ஈரான் மீது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பொருளாதார தடைகளை விதித்தார். மேலும் தென்கொரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த ரூ.49,138 கோடியை ஈரானுக்கு கிடைக்க செய்யாமல் முடக்கினார்.

இந்தநிலையில் அமெரிக்கா- ஈரான் இடையே கைதிகள் பரிமாற்றம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்பேரில் அமெரிக்காவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு ஈரானில் சிறை தண்டனை அனுபவிக்கும் 5 அமெரிக்கர்களை விடுவிக்க ஈரான் ஒப்புக்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ். பொருளாதார தடையால் முடக்கபட்டிருந்த ரூ.49,138 கோடியை அமெரிக்கா விடுவித்துள்ளது. மேலும் அமெரிக்க சிறையில் உள்ள ஈரானியர்கள் 5 பேரை விடுவிக்கவும் ஆலோசனை நடக்கிறது.

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட அவர்கள் கத்தார் தலைநகர் டோகாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை கத்தாருக்கான அமெரிக்க தூதர் டேவிஸ் நேரில் சென்று வரவேற்றார். இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் "ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 அப்பாவி அமெரிக்கர்கள் தாயகம் திரும்புகின்றனர்" என்றார்.


Next Story