"இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" - பில் கேட்ஸ் பாராட்டு


இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - பில் கேட்ஸ் பாராட்டு
x

இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஒரு தனியார் நிகழ்ச்சியில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பாராட்டினார். டிஜிட்டல் பணம் செலுத்துதல், சுகாதாரம், தடுப்பூசி இயக்கம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டி பேசினார்.

கொரோனா காலத்தில் இந்தியாவில் பல விஷயங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியா ஆக்சிஜன் தயாரிப்பில் தீவிரம் காட்டியதால், பல உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story