பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்


பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்
x

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான டுவிட்டர் பக்கம் இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தான் நாட்டு அரசுக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் டுவிட்டர் பக்கத்திற்கு சென்றால், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று டுவிட்டர் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாகிஸ்தான் அரசின் டுவிட்டர் பக்கம் நிறுத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது எதற்காக என்ற விவரம் வெளியாகவில்லை. ஒருநாட்டின் சட்ட விதிகளுக்கு மாறாக இருந்தால், உள்ளூர் அதிகாரிகளின் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று டுவிட்டர் நிறுவனம் இதுபோன்று கணக்குகளை நிறுத்திவைக்கும் நடைமுறையை மேற்கொண்டு வருகிறது.


Next Story