பாகிஸ்தானில் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் 6 பயங்கரவாதிகள் சாவு


பாகிஸ்தானில் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் 6 பயங்கரவாதிகள் சாவு
x

பாகிஸ்தானில் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் 6 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணம் ஹோஷாப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவத்தினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராணுவ வீரர்களை பார்த்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து அவர்களை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனையடுத்து அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். எனவே அவர்களை தேடும் முயற்சியில் ராணுவத்தினர் அடுத்தடுத்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.


Next Story