புளோரிடா மாகாணத்தை புரட்டிப் போட்ட 'இயான்' புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்வு!


புளோரிடா மாகாணத்தை புரட்டிப் போட்ட இயான் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்வு!
x

அமெரிக்காவை தாக்கிய மிக சக்திவாய்ந்த இயான் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் உயர்ந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவை தாக்கிய மிக சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றான இயான் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் உயர்ந்துள்ளது.

அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற 'இயான்' புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே இயான் சூறாவளி புயல் கடந்த புதன்கிழமை மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

புளோரிடாவை சூறையாடி சென்ற இயான் சூறாவளி புயல், தெற்கு கரோலினா கடற்கரையில் 2-வது முறையாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. தீவிர வலுவுடன் தாக்கிய இந்த புயலால் நீரில் மூழ்கிய பகுதிகளில் இன்னும் உயிர் பிழைத்தவர்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

புளோரிடாவில் சனிக்கிழமை இரவு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தனர். லீ மாவட்டத்தில்(கவுண்டியில்) மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக பதிவாகியுள்ளது. மாவட்ட வாரியாக உயிரிழப்புகள் இன்னும் அதிகரித்து வருகின்றன.

புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு பேரழிவை ஆய்வு செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாரத்தின் பிற்பகுதியில் புளோரிடா செல்கிறார். பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் திங்களன்று போர்ட்டோ ரிக்கோவுக்குச் செல்வார்கள், புதன்கிழமை புளோரிடாவுக்குச் செல்கிறார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், தேச வரலாற்றில் மிக மோசம் என்ற அளவிலான தரவரிசையில் இந்த சூறாவளி புயல் இடம் பெறும் என்றும், நாட்டை கட்டமைக்க சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகும். இது புளோரிடாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி அல்ல, அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடி என பைடன் குறிப்பிட்டார்.


Next Story