ஐ.டி. சிறப்பு பணியை செய்ய வந்துள்ளேன்; தான்சானியாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு


ஐ.டி. சிறப்பு பணியை செய்ய வந்துள்ளேன்; தான்சானியாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு
x

ஐ.டி. சிறப்பு பணியை செய்வதற்காக வந்து உள்ளேன் என தான்சானிய பயணத்தில் இந்திய வம்சாவளியினர் முன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

தர் எஸ் சலாம்,

இந்தியாவில் இருந்து தான்சானியா நாட்டுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் அந்நாட்டின் தர் எஸ் சலாம் நகரில் இந்திய வம்சாவளியினர் கூடியிருந்த திரளான கூட்டத்தின் முன்பு உரையாற்றினார்.

அப்போது அவர், நான் ஐ.டி. (இந்தியா-தான்சானியா) சிறப்பு பணியை செய்வதற்காக தான்சானியா நாட்டுக்கு வந்துள்ளேன். இந்த பணியின்படி, இந்த நாட்டில் இன்று காணப்படும் சில முக்கிய முன்னுரிமை வாய்ந்த விசயங்கள் பற்றி பேசப்படும் என கூறியுள்ளார்.

இந்த உரையின்போது, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா இடையேயும் வலிமையான உறவு உள்ளது என அவர் சுட்டி காட்டி பேசினார். காலனி ஆட்சியின்போது நமது பகிரப்பட்ட சுதந்திர போராட்டமும் அதன் ஒரு பகுதியாகும். அதனுடன், கிழக்கு ஆப்பிரிக்காவுடனும் நாம் ஒரு குறிப்பிடும்படியாக நெருங்கிய இணைப்பை கொண்டுள்ளோம். அதனுடன், இந்தியாவின் சில பகுதிகள் நெருங்கிய தொடர்புடையனவாக உள்ளன என்றும் அவர் பேசியுள்ளார்.


Next Story