ஆக்கிரமிப்பு பகுதிகளை ரஷியா இணைத்தது பயனற்றது - உக்ரைன் அதிபர் சாடல்


ஆக்கிரமிப்பு பகுதிகளை ரஷியா இணைத்தது பயனற்றது - உக்ரைன் அதிபர் சாடல்
x

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது.

கீவ்,

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. 8 மாதங்களை எட்டியும் போர் முடிவில்லாமல் நீண்டு வரும் சூழலில் போரில் ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களில் ரஷியா பொதுவாக்கெடுப்பு நடத்தி அவற்றை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

சர்வதேச சட்டத்துக்கு எதிரான இந்த இணைப்புக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் உக்ரைன் பிராந்தியாங்களை ரஷியாவுடன் இணைக்கும் சட்டத்தில் ரஷிய அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார்.

இதுப்பற்றி கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "எங்கள் நிலத்தை கைப்பற்ற முயற்சிக்கும் எந்தவொரு ரஷிய முடிவும், எந்த ஒப்பந்தங்களும் பயனற்றவை. பயங்கரவாத நாட்டின் மதிப்பற்ற முடிவுகள் அவை கையெழுத்திடப்பட்ட காகிதத்துக்கு மதிப்பு இல்லை"


Next Story