தாய்லாந்தில் குரங்கு அம்மை தடுப்பூசி போட நடவடிக்கை


தாய்லாந்தில் குரங்கு அம்மை தடுப்பூசி போட நடவடிக்கை
x

அதிக ஆபத்தான நபர்களுக்கு தாய்லாந்தில் குரங்கு அம்மை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாங்காக்,

குரங்கு அம்மை நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ள நாடுகளில் ஒன்றாக ஆசிய நாடான தாய்லாந்து உள்ளது.

அங்கு இதுவரை 2 பேருக்கு இந்த தொற்று உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு அதிக பாதிப்பு ஆபத்தில் உள்ள குழுக்களுக்கு குரங்கு அம்மை தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அங்கு 1,000 'டோஸ்' குரங்கு அம்மை தடுப்பூசிகள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வந்து சேரும் என தாய்லாந்து நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story