நேட்டோவின் "அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி" இன்று தொடக்கம்!


நேட்டோவின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி இன்று தொடக்கம்!
x

Image Credit:AFP

நேட்டோ அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியது.

பிரஸ்ஸல்ஸ்,

நேட்டோ அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியது.

மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோ தனது வழக்கமான அணுசக்தி தடுப்பு ராணுவ பயிற்சி, ரஷியா உக்ரைன் மீது போர் ஆரம்பிப்பதற்கு முன்பு திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த ராணுவ ஒத்திகை பயிற்சி தொடங்கியது.மேற்கு ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து வான்வெளி மீது நடைபெறும் இப்பயிற்சியில் மொத்தம் 60 விமானங்கள் வரை பங்கேற்கும்.30 நாடுகள் இணைந்துள்ள இந்த ராணுவ ஒத்திகை பயிற்சி இம்மாதம் 30ம் தேதி வரை நடைபெறும்.

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், இந்த பயிற்சியை கைவிட வேண்டும் என்ற கருத்தை நிராகரித்தார்.அவர் கூறுகையில், "உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக, நாங்கள் திடீரென்று இப்போது இந்த பயிற்சியை ரத்து செய்தால் அது மிகவும் தவறானதாக அமையும். போர் வரும் முன்னர், முன்னெச்சரிக்கையாக தடுப்பதே நேட்டோவின் ராணுவத்தின் வலிமை. நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்" என்றார்.


Related Tags :
Next Story