கனடாவில் புதிய வகை கொரோனா - 5 பேருக்கு பாதிப்பு


கனடாவில் புதிய வகை கொரோனா - 5 பேருக்கு பாதிப்பு
x

கோப்புப்படம்

கனடாவில் புதிய வகை கொரோனாவால் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒட்டவா,

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவியுள்ள புதிய கொரோனாவான பிஏ.2.75 கனடாவிலும் நுழைந்துள்ளது.

அங்கு 5 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொற்று அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது. இதுகுறித்து கனடா சுகாதார துறை செய்தி தொடர்பாளர் கூறும்போது, "கடந்த 6-ந் தேதி நிலவரப்படி, ஆரம்ப கட்ட வரையறை அடிப்படையில் கனடாவில் பிஏ.2.75 5 பேருக்கு பாதித்துள்ளது. இந்த துணை பரம்பரையின் வரையறை தெளிவுபடுத்தப்படுகிறபோது பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை மாறுபடலாம்" என தெரிவித்தார்.


Next Story