படைகளை திரும்பப் பெறாமல் ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை கிடையாது- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்


படைகளை திரும்பப் பெறாமல் ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை கிடையாது- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்
x

படைகளை திரும்பப் பெறாமல் ரஷியாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என ஜெலன்ஸ்கி தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

கீவ்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து வரும் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். இரு தரப்பிலும் மிகப்பெரிய் அளவில் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக அவர் உக்ரைன் சென்றுள்ளார். அவருடன் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேற்று சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்

இந்த நிலையில் படைகளை திரும்பப் பெறாமல் ரஷியாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ரஷ்யா அமைதிக்கு தயாராக இருப்பதாக எர்டோகன் கூறியதை அடுத்து தான் மிகவும் ஆச்சரியமடைந்ததாக ஜெலென்ஸ்கி கூறினார். மேலும் முதலில் அவர்கள் எங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், பின்னர் பார்க்கலாம் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.


Next Story