பாகிஸ்தானில் 21 பயங்கரவாதிகளை கைது செய்த ராணுவம்


பாகிஸ்தானில் 21 பயங்கரவாதிகளை கைது செய்த ராணுவம்
x

பாகிஸ்தானில் 21 பயங்கரவாதிகளை கைது செய்த ராணுவம் அவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர்.

பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ்., தெஹ்ரீக்-இ-தலீபான் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது அவ்வப்போது தாக்குதலை நடத்தி அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே இவர்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு ராணுவத்தினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள லாகூர், அட்டாக், ராவல்பிண்டி பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகள் முகாமை ராணுவம் சுற்றி வளைத்தது. இதனையடுத்து 21 பயங்கரவாதிகளை கைது செய்த ராணுவம் அவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர்.


Next Story