அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் : நாட்டு மக்களுக்கு புதின் மீண்டும் வலியுறுத்தல்


அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் : நாட்டு மக்களுக்கு புதின் மீண்டும் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Feb 2024 9:00 PM GMT (Updated: 16 Feb 2024 9:00 PM GMT)

ஒரு தம்பதி குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென புதின் வலியுறுத்தியுள்ளார்.

மெக்சிகோ,

உலக அளவில் பரப்பளவில் மிகப்பெரிய நாடு ரஷியாதான். இந்த நாட்டின் மக்கள்தொகை 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 14.34 கோடியாக உள்ளது. 1990 களில் இருந்தே ரஷியாவின் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இது ஒருபக்கம் என்றால் போர் உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உக்ரைன் போரில் 3 லட்சம் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ரஷிய அதிபர் புதின் அந்த நாட்டு மக்கள் குறைந்தது 8 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்தநிலையில், ரஷிய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென அதிபர் புதின் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு தம்பதி குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டில், ரஷிய ராணுவம் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில், போரினால் ஏராளமான ரஷியர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அதிக அளவில் மக்கள் ரஷியாவை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஒரு நாடு வாழ, ஒரு குடும்பத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகளாவது இருக்க வேண்டும் என ரஷிய அதிபர் கூறியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டின் ஆரம்பத்தில், ரஷியாவின் மக்கள் தொகை 146.4 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷியாவில் பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவதாகவும் அதுவும் குறிப்பாக கொரோனா, ரஷியா - உக்ரைன் போர் போன்ற காரணங்களால் பிறப்பு விகிதம் மேலும் குறைந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.


Next Story