வியட்நாம் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி - ராஜ்நாத் சிங்


வியட்நாம் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி - ராஜ்நாத் சிங்
x

மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பயிற்சிக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவ மந்திாி ராஜ்நாத் சிங் வழங்கினார்.

வியட்நாம்,

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் சென்று உள்ளாா். அந்நாட்டு விமானப்படை பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவுவதற்காக 1 மில்லியன் அமொிக்க டாலருக்கான காசோலையை வழங்கினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவில்,

வியட்நாம் விமானப்படை அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவுவதற்காக 1 மில்லியன் அமொிக்க டாலருக்கான காசோலையை வழங்கினேன். வியட்நாம் வான் பாதுகாப்பு மற்றும் விமானப்படை பணியாளர்களுக்கு மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப திறன்களை உயர்த்துவதற்கு ஆய்வகம் கணிசமாக பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன். என அவா் பதிவிட்டுள்ளாா்.


Next Story