உக்ரைனில் அணு உலைக்கு அருகில் ரஷியா மீண்டும் தாக்குதல்


உக்ரைனில் அணு உலைக்கு அருகில் ரஷியா மீண்டும் தாக்குதல்
x

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி நாளையுடன் (புதன்கிழமை) 6 மாதங்கள் ஆகிறது.

கீவ்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி நாளையுடன் (புதன்கிழமை) 6 மாதங்கள் ஆகிறது.ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. மாறாக போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரின் சமீபத்திய பிரச்சினையாக உக்ரைனில் உள்ள ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணு அலையான ஜபோரிஜியா அணுஉலை மாறியிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜபோரிஜியா அணுஉலைக்கு அருகில் ரஷியா தாக்குதல் நடத்தியது. இது மிகப்பெரிய பேரழிவு அணு விபத்தை ஏற்படுத்தும் என உலக நாடுகள் கவலை தெரிவித்தன.

குறிப்பாக ஐ.நா.வும், அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளும் ஜபோரிஜியா அணுஉலைக்கு அருகே தாக்குதல்களில் ஈடுபட கூடாது என உக்ரைன் மற்றும் ரஷியாவை வலியுறுத்தின. இந்த நிலையில் ஜபோரிஜியா அணுஉலைக்கு அருகில் ரஷியா நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜபோரிஜியா அணுஉலையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நிகோபோல் என்ற இடத்தில் ரஷியா தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து ரஷியா தரப்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்படவில்லை.


Next Story