ஜன்னல் ஓர சீட்டுக்காக அடித்துக்கொண்ட பெண் பயணிகள்...பஸ்ல இல்லீங்க...விமானத்தில்...!


ஜன்னல் ஓர சீட்டுக்காக அடித்துக்கொண்ட பெண் பயணிகள்...பஸ்ல இல்லீங்க...விமானத்தில்...!
x

பிரேசிலில் ஜன்னல் ஓர இருக்கைக்காக பெண் பயணிகள் இடையே சண்டையால் விமானம் டேக் ஆப் செய்வது நிறுத்தப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

பிரேசிலில் ஜன்னல் ஓர இருக்கைக்காக பெண் பயணிகள் இடையே சண்டையால் விமானம் டேக் ஆப் செய்வது நிறுத்தப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

அரசு பஸ்சாக இருந்தாலும் சரி, இரயிலாக இருந்தாலும் சரி - பயணமும், ஜன்னல் ஓரமும் ஒன்று சேர்ந்தாலே அலாதி பிரியம் தான். ஜன்னல் ஓரம் சீட்டு கிடைப்பதை சிலர் போன ஜென்மத்து புண்ணியம் என்கிற அளவிற்கு கொண்டாடுவர். சிலர் படுத்து குறட்டை விட்டு தூங்குவார். பஸ்சில் மற்றும் இரயில்களில் மட்டுமல்ல "இது" விமானங்களில் கூட நடக்கும்.

விமானத்தின் ஜன்னல் ஒர இருக்கையில் அமர்ந்தபடி பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து நிலத்தையும், கடலையும் பார்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது.

பஸ்சில் சீட் பிடிப்பதற்கும், துண்டு போட்டு சீட் பிடித்த இடத்தில் வேறு பயணி அமர்ந்து விட்டதாகவும் அடிக்கடி பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவதை பார்த்திருப்போம்.அந்தவகையில், விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைக்காக சண்டை நடைபெற்றது சமூகவலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.

பிரேசிலில் இந்த வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: -

பிரேசிலின் சல்வேடார் நகரில் இருந்து சா பவுலோ நகரத்திற்கு கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜி31659- என்ற விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானம் டேக் ஆப் ஆவதற்கு சில நிமிடங்களே இருந்தது. அப்போது விமானத்தில் சில பெண் பயணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 15 பெண் பயணிகள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை சண்டையில் இருந்து விலக்கி விடுவதற்கு விமான பணிப்பெண்களும் படாத பாடு பட்டனர். இது தொடர்பான வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சண்டை ஏன் நடந்தது என்பது குறித்து விமான பணிப்பெண் ஒருவர் கூறியதாவது:-

விமானத்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இருந்த ஒரு பெண் பயணியிடம் சக பெண் பயணி ஒருவர் தனது மாற்றுத்திறனாளி மகளுக்காக ஜன்னல் ஓர இருக்கையை விட்டு தருமாறு கேட்டு உள்ளார். ஆனால், ஜன்னல் ஓரத்தில் இருந்த அந்த பெண் பயணி இருக்கையை மாற்றிக் கொடுக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே முதலில் வாக்கு வாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இரு பெண்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் சண்டையிட தொடங்கினர். இதனால், நாங்கள் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றார்.

விமானத்தில் ஜன்னல் ஓர இருக்காகாக தொடங்கிய இந்த சண்டையால் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. இதனால், பிற பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் கூறுகையில்,

"2-ம் தேதி இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது. சண்டையிட்ட அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. விமானத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். பயணிகளின் பாதுகாப்பு கருதியே நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.


Next Story